அன்புள்ள ஜெ,
உங்கள் காடு நாவலை படிக்கக் கையிலெடுத்தபோது, ராபர் நாவலை சற்று நினைவுகூர்ந்தேன். ரப்பர் உங்கள் முதல் நாவல், அதுவும் உங்கள் இருபத்துநான்காவது வயதில் எழுதியது என்று என்னால் நம்ப முடியவில்லை. கடந்த இருபத்தைந்து வருடங்களாக பலரும் பலவிதங்களில் ரப்பர் குறித்து தங்கள் உயர்வான விமரிசனங்களை சொல்லியிருப்பார்கள். உங்களுக்கும் அது புளித்துப் போயிருக்கும்.
ரப்பர் படித்து ஒரு மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகியிருக்கும். ஆனால்
என்நினைவுகளில் எஞ்சியது என்னவோ குளம்கோரியும் அவனது நாயர் டீக்கடை பெஞ்சு சொற்பொழிவும்தான். வன் சொன்ன வரலாற்று நிகழ்வுகளை ஏன் நீங்கள் ஒரு புதினமாக எழுதக்கூடாது? அதுவழி தென்திருவிதான்கூரின் வரலாற்றி ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லலாமே.
திப்புவின் பட்டாளத்தை நாயரின் யானைப்படை வழிமறித்து சண்டையிட்டது, மத்தகத்தில் வரும் மதம்பிடித்த யானைதான் நினைவுக்கு வந்தது. அதைப்போல் உங்கள் ஏழாம் உலகம் நாவலின் கரு ரப்பர் நாவளிளிலுள்ள “பிச்சைகாரர்கள் வரிசைபோல் சிரட்டைகள் ஏந்திய மரங்கள்” என்னும் வரிகளிலிருந்து உருவானதாக நினைக்கின்றேன்.
மொத்தத்தில், ரப்பர் என்பது மனித கொடூரத்தின் (கொலை, கொள்ளை, வஞ்சகம், ஏமாற்று ….) எழுச்சியும் வீழ்ச்சியும் என்றே எனக்குப்படுகின்றது.
ஒரு வரலாற்று நாவலை எதிர்பார்த்து,
அன்புடன்,
கிறிஸ்.
அன்புள்ள கிறிஸ்டோபர் ஆன்டனி
ரப்பர்கூட ஒரு வரலாற்று நாவல்தான். சமகால வரலாறு. வரலாற்றில் புறந்தள்ளப்பட்டவர்கள் எப்போதுமே வரலாற்றை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். குளம்கோரி அத்தகையவன்
அசோகவனம் திருவிதாங்கூர் வரலாறுதான். 1720 முதல்…
ஜெ
No comments:
Post a Comment